சமைக்க மறுத்து நடன வகுப்பிற்கு சென்ற மனைவி : கோபத்தில் நடந்த விபரீதம்!!

25

Drunk Man Kills Wife in Nagpur, She Had Refused To Cook To Attend Dance Class: சமைக்க மறுத்து நடன வகுப்பிற்கு செல்ல விரும்பம் தெரிவித்த மனைவியை கணவன் தாக்கியதில் மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் யாமினி கிருஷ்ணா லால் யாதவ்(Yamini Krishna Lal Yadav) என்ற 38 வயது பெண், தன்னுடைய கணவன் கிருஷ்ணா லால் யாதவிடம் சமைக்க மறுத்து அவருடைய குடியிருப்பில் உள்ள நடன வகுப்பிற்கு செல்ல இருப்பதாக தெரிவித்ததை அடுத்து இருவருக்கும் இடையே கொடூரமான மோதல் ஏற்பட்டுள்ளது.

காவல்துறை தகவல்படி, வேலை முடிந்து திரும்பிய 41 வயது கிருஷ்ணா லால் யாதவ் தனக்கும், தன்னுடைய குழந்தைக்கும் உணவு சமைக்குமாறு மனைவி யாமினியிடம் கேட்டுள்ளார். ஆனால் தான் நடன வகுப்பிற்கு செல்ல இருப்பதாக கூறி, சமைக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

குழந்தைகள் முன்னிலையில் நடந்த இந்த மோதலின் போது கணவன் கிருஷ்ணா லால் யாதவ், மனைவி யாமினியின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் பலமாக தாக்கியுள்ளார். சண்டைக்கு பிறகு கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் தீவிரமான வலியை எதிர்கொண்ட யாமினி, கணவன் கிருஷ்ணா லால் யாதவிடம் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி வருமாறு கேட்டுள்ளார்.

அதன்படி மருத்து கடைகளுக்கு கணவர் கிருஷ்ணா சென்ற போதிலும், கடைகள் மூடப்பட்டிருந்ததால் மாத்திரைகள் வாங்காமல் வீடு திரும்பியுள்ளார். நேரம் செல்ல செல்ல வலியால் துடித்த யாமினி, பின்னர் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். யாமினிக்கு வயிறு வீங்க தொடங்கிய நிலையில், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் இது தற்செயலான மரணம் என்று அனைவராலும் கருதப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் யாமினி கழுத்தில் முறிவு ஏற்பட்டதும், குடல் பகுதிகள் கடுமையாக சிதைந்து இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து யாமினியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கணவர் கிருஷ்ணா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.