வவுனியா தபால் நிலையத்திற்கு முன்னால் நடந்த விபத்தில் இரு பெண்கள் படுகாயம்!!

337

Accident

இன்று (01.10) காலை11.30 மணியளவில் கண்டிவீதியில் மோட்டர் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இரு யுவதிகள் மீது வவுனியா தபால் அலுவலகத்துக்கு முன் கல்வியியல் கல்லூரி வான் மோதியதில் யுவதிகள் இருவரும் காயமடைந்தனர்.

மேற்படி சம்பவத்துக்கு வான் சாரதியே காரணம் என மேற்படி வானில் பயணித்தவர்களும் சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்களும் தெரிவித்தனர். மேற்படி சம்பவம் தபால் அலுவலக பக்கம் நிறுத்தி வைக்கபட்டிருந்த வாகனம் திடீரென வீதிக்கு வர முற்பட்டபோதே சாரதியின் கவனமின்மையால் இடம்பெற்றது.

மேற்படி சம்பவத்தில் காயமடைந்த யுவதிகள் இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த வான் சாரதி இதற்கு முன்னரும் பல விபத்துக்களுக்கு காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . வவுனியா போக்குவரத்து பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-பண்டிதர்-