வவுனியாவில் வேப்பங்குளம் பகுதியில் இருந்து கைக்குண்டு மீட்பு!!

276

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, வேப்பங்குளம், யாழ் ஐஸ்கிறீம் வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் உள்ள கிணறு ஒன்றை ஆழமாக்கி துப்புரவு செய்த போதே அதில் கைக்குண்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து காணி உரிமையாளர் வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைக்குண்டை மீட்டு செயலிழக்கச் செய்துள்ளனர்.

கிணற்றில் மேலும் வெடிபொருள்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதனை விசேட அதிரடிப்படையினர் முழுமையாக சோதனையிட்ட பின்னரே தொடர்ந்து ஆழமாக்குமாறு பொலிஸாரால்காணி உரிமையாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 2