சீனாவின் கோபத்தை இந்தியா தூண்டக்கூடாது – சீன இராணுவ தளபதி எச்சரிக்கை..

636

china

எல்லை பிரச்னையில் சீனாவின் கோபத்தை இந்தியா தூண்டக்கூடாது என சீன இராணுவ தளபதி லுயோ யுவான் தெரிவித்துள்ளார்.சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, இந்தியா- சீனா எல்லை பிரச்னை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அந்நாட்டு இராணுவ அமைச்சருடன் இன்று அவர் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

இதற்கிடையே சீன இராணுவ தளபதி லுயோ யுவான் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், இரு நாட்டுக்கிடையே உள்ள எல்லை பகுதியில் 90 ஆயிரம் சதுர கி.மீ பரப்பு இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எல்லை பகுதியில் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை இந்தியா அதிகரித்து, சீனாவின் கோபத்தை தூண்டக்கூடாது

சீனாவின் அச்சுறுத்தலால் தான் இராணுவ செலவை அதிகரித்துள்ளதாக இந்தியா கூறுகிறது.எதைக் கூற வேண்டும், எதை கூறக்கூடாது என்ற விஷயத்தில் இந்தியா எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.