வவுனியா மாவட்ட அனைத்து பல்கலைகழக மாணவர் அபிவிருத்தி சங்கம் நடாத்தும் க.பொ.த சாதாரணதர மாணவர்களிற்கான கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களிற்கான இலவசகருத்தரங்கு வவுனியாவில் இடம்பெறவுள்ளதாக அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் நிறோஷன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் எமது சங்கம் கல்விக்கரம் செயற்திட்டத்தின் ஊடாக மாணவர்களின் கல்வி வளர்ச்சியை விருத்தி செய்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் 2014 ஒக்டோபர் 8ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 20 பாடசாலையை சேர்ந்த மாணவர்களிற்கு எட்டு நிலையங்களில் இக்கருத்தரங்கானது நடாத்தப்படவுள்ளது.
எனவே தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலையை சார்ந்த மாணவர்கள் அனைவரும் இக்கருத்தரங்கில் கலந்து பயன்பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.