பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் வவுனியா, பளை ஆகிய பிரதேசங்களுக்கான இரவுநேர தபால் ரயில் சேவைகள் இன்று (08.10) இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.