50 வருடங்களுக்கு பின் மீண்டும் திருமணம் செய்து கொண்ட தம்பதி!!

629

50

50 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்த கணவனும் மனைவியும் மீண்டும் இன்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று அனுராதபுரம் நகரில் நடைபெற்றது.

அனுராதபுரம் புனித ஜோசப் தேவாலயத்தில் இவர்கள் சம்பிரதாயபூர்வமாக இன்று திருமணம் செய்து கொண்டனர்.

இலக்கம் 05 பிரிமன் வீதி அனுராதபுரம் என்ற முகவரியில் வசித்து முன்னாள் நகர உருவாக்கல் கலைஞரான 82 வயதான டப்ளியூ.பி. பெர்ணான்டோ, 71வயதான அவரது மனைவி ரீட்டா மாலினி ஆகியோர் 50 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இவ்வாறு திருமணம் செய்து கொண்டனர்.

அனுராதபுரம் ஆயர் வணக்கத்திற்குரிய நோபட் அந்ராதி புனித ஜோசப் தேவாலயத்தின் பங்கு தந்தை ஜோய் பெர்ணான்டோ ஆகியோரின் ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் இந்த திருமணம் நடைபெற்றது.

4 பிள்ளைகளின் பெற்றோரான இவர்களுக்கு பேரன், பேத்திகள் 7 பேரும் கொள்ளு பேரன்களும் கொள்ளு பேத்திகளும் உள்ளனர்.