வவுனியாவில் கொடூரத் தந்தையால் சீரழிக்கப்பட்ட சிறுமி!!

288

girl

15 வயதான தனது மூத்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரை வவுனியா பொலிஸ் நிலையத்தின் தீர்க்கப்படாத குற்றச் செயல் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பாடசாலை செல்லும் 15 வயதான இந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைக்கு செல்லும் இந்த சிறுமிக்கு இரத்த போக்கு அதிகரித்ததால், பாடசாலை ஆசிரியர்கள் சிறுமியை குடும்ப சுகாதர அதிகாரியிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது சிறுமி கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த பல மாதங்களாக தந்தையினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட இந்த சிறுமி குழந்தையை பெற்றெடுக்கும் தருவாயில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகளை தான் வல்லுறவுக்கு உட்படுத்தியமை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொண்ட நபர் கடந்த ஜூன் மாதம், அப் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து சந்தேக நபர் கிளிநொச்சி பொன்நகர் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய் சில வருடங்களாக வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதாகவும் தனக்கு மூன்று இளைய சகோதர சகோதரிகள் இருப்பதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது சிறுமி கூறியுள்ளார்.

தந்தையுடன் உறவு வைத்து கொள்ள மறுத்தால், அவர் 4 வயதான தனது இளைய சகோதரனை கொடூரமான முறையில் தாக்குவதாகவும் தம்பி அடி வாங்குவதை தாங்கி கொள்ள முடியாமல், விருப்பமின்றி தந்தையுடன் அவ்வாறு நடந்து கொண்டதாக சிறுமி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

பிள்ளைகள் இருக்கும் தாய்மார் பணம் சம்பாதிக்கும் நோக்கில் வெளிநாடுகளுக்கு தொழில் புரிய சென்று விடுவதால், கேட்பாரின்றி இருக்கும் பிள்ளைகள் குறிப்பாக பெண் பிள்ளைகள் வெறிப்பிடித்த தந்தைமார், உறவினர், அயலவர்களினால் இப்படியான அசம்பாவிதங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால், பெற்றோரின் பாசத்தை எதிர்பார்க்கும் வயதில் இந்த பிள்ளைகள் இப்படியான காட்டுமிராண்டிகளிடம் சிக்கி தவிக்கின்றனர்.

இதனை உணர்ந்து குடும்பங்களும் சமூகமும் சீரழிந்து போகாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

வளரும் வயதில் பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தை சேர்ந்த தாய்மார் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதையே இப்படியான சம்பவங்கள் எடுத்து காட்டுகின்றன.