அவுஸ்திரேலியாவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் மாட்டிக் கொண்ட பெண் ஒருவர், 17 நாட்கள் கழித்து உயிருடன் திரும்பியுள்ளார்.
அவுஸ்ரேலியாவின் வட-கிழக்கு பகுதியில் உள்ள அடர்ந்த காட்டில் சன்னோன் பிரேசர்(30) என்ற பெண் சிக்கிக் கொண்டார்.
இதனையடுத்து பொலிசார் மற்றும் அவசர சேவை அதிகாரிகள் ஹெலிகொப்டர் மற்றும் பைக்கில் தேடுதல் வேட்டை நடத்தியதில் 17 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பொலிஸ் அதிகாரி நீயூடன் கூறுகையில், அதிசயங்கள் பற்றி கவலைப்படவதில்லை என்றும், ஆனால் இவ்வாறு 17 நாட்கள் வாழ்வது மிகவும் கடினமானது எனவும் தெரிவித்துள்ளார்.
மீன்களையும், பூச்சிகளையும் தின்று உயிர் வாழ்ந்து வந்த சன்னோன், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சன்னோன் தொலைந்தது குறித்தும், மீட்புக் குழுவினரின் கண்ணில் தென்படாதது ஏன் என்பது குறித்தும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.