கேரளாவை சேர்ந்த 111 வயது பாட்டி ஒருவர் உலகின் வயதான திருமணமாகாத பெண் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்க முயற்சித்து வருகிறார்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் வசித்து வரும் குஞ்சன்னம், இளம் பருவத்திலேயே பெற்றோரை இழந்து விட்ட குஞ்சன்னம், தனது தோள்களில் குடும்ப பாரத்தை ஏற்றிக் கொண்டதால் திருமணமே செய்து கொள்ளவில்லை.
தனது உடன் பிறந்தோரைப் படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்துள்ளார். தற்போது அவர்கள் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.
ஏற்கனவே, உலகிலேயே திருமணமாகாத வயதான பெண்மணி என லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். வரும் ஜனவரி மாதம் இதற்கான அதிகாரப்பூர்வமாக சான்றிதழை லிம்கா வழங்க உள்ளது.
தற்போது 111 வயதாகும் குஞ்சன்னத்திற்கு இருமல், சளி தவிர இதுவரை வேறு எந்த உடல் நலக் கோளாறும் வந்ததில்லை என அவரது குடும்பத்தார் கூறியுள்ளனர்.
சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வரும் குஞ்சன்னத்திற்கு, தற்போதும் தெளிவான பார்வை மற்றும் கேட்கும் திறன் உள்ளது, தினசரி அவர் நடைபயிற்சி மேற்கொள்கிறார் என கூறியுள்ளனர்.