வவுனியா – மன்னார் வீதி கலைமகள் விளையாட்டு கழக மைதானம் அருகில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என வவுனியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து மன்னார் வீதி வழியாக பயணித்த உழவு இயந்திரம் ஒன்று உள் வீதியில் திருப்ப முற்பட்ட வேளை பின்னால் வந்த மோட்டர் சைக்கிளுடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றது.
இதில் மோட்டார் சைக்கிள் சாரதியான வவுனியா, கூமாங்குளத்தைச் சேர்ந்த எஸ்.முரளி (35) என்பவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.