24 வருடங்களின் பின்னர் யாழ் தேவியின் யாழ். நோக்கிய பயணம் நாளை!!

512

Jaffna

சுமார் 24 வருடங்களின் பின்னர் யாழ் தேவி புகையிரத சேவை நாளை யாழ்ப்பாணம் வரை தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இந்திய அரசின் உதவியுடன் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையப் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, நாளை திங்கட்கிழமை ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ இதனைத் திறந்து வைக்கவுள்ளார்.

தற்போது கொழும்பில் இருந்து பளை வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை நாளை முதல் யாழ்ப்பாணம் வரை பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று சனிக்கிழமை யாழ் தேவி புகையிரதத்தின் இறுதிக் கட்ட பரீட்சார்த்த சேவை இடம்பெற்றது. பளையில் இருந்து மாலை 04.00 மணியளவில் இந்த இறுதிக்கட்ட பரீட்சார்த்த சேவை ஆரம்பிக்கப்பட்டு, 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தினை சென்றடைந்தது.