இலங்கை அணியை வீழ்த்தி 2வது ஒருநாள் போட்டியையும் கைப்பற்றியது இந்திய அணி!!

490

IND

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட்டுக்களால் இந்திய அணி அபார வெற்றியிட்டியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.

இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியுள்ள நிலையில் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.

இதன்படி துடுப்புடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களான குசல் பெரேரா (0), திலஹரத்ன டில்ஷான் (35) ஆகியோர் கைகொடுக்காத போதும், மத்தியூஸ் மற்றும் சங்கக்கார வலுசேர்ந்தனர்.

குமார் சங்கக்கார இப் போட்டியில் தனது 87வது அரைச்சதத்தைப் பதிவு செய்ததோடு உமேஷ் யாதவின் பந்துவீச்சில் 61 ஒட்டங்களைப் பெற்ற நிலையில் வெளியேறினார்.

எனினும் இறுதி வரை களத்தில் இருந்த அஞ்சலோ மத்தியூஸ் அதிரடியாக ஆடி 92 ஓட்டங்களை விளாசினார்.

50 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை 274 ஓட்டங்களை குவித்தது.

இதனை அடுத்து 275 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி சார்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெஹானே 8 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் வெளியேறினார்.

எனினும் சிறப்பாக ஆடிய ஷகீர் தவான் 79 ஓட்டங்களைக் குவித்ததோடு, அம்பட்டி ராயுடு 121 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இறுதிவரை களத்தில் இருந்து இலங்கை வீரர்களுக்கு பெரும் சவாலாக விளங்கினார்.

44.3 ஓவர்களில் 275 எனும் இலக்கை இலகுவாக எட்டிய இந்திய அணி நான்கு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்திருந்தது.

இதனால் 33 பந்துகள் கைவசம் இருக்க 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி இந்தியா வசமானது, இதன்படி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.