இலங்கை இந்திய அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன்காடன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி 153 ஓட்டங்களால் வெற்றி கொண்டது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
இதன்படி களம் இறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 404 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா 264 ஓட்டங்களை பெற்றமை விசேட அம்சமாகும். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக மத்யூஸ் 2 விக்கெட்டுக்களையும் எரங்க மற்றும் குலசேகர தலா 1 விக்கெட்டினையும் பெற்றுக்கொண்டனர்.
405 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இலங்கை அணி 43.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 251 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இலங்கை அணி சார்பாக மத்தியூஸ் 75 ஓட்டங்களையும் திரிமன்ன 59 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் குல்கர்னி 4 விக்கெட்டுக்களை பெற்றமை விசேட அம்சமாகும். போட்டியில் ஆட்ட நாயகனாக ரோகித் சர்மா தெரிவானார்.