பிள்ளை மழையில் நனைந்ததால் அதிபரை தாக்கிய பிரதேச சபை உப தலைவர் கைது!!

331

A6

தன்னுடைய பிள்ளை மழையில் நனைந்தமை தொடர்பில் கெக்கிராவ பகுதி பாடசாலை அதிபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கெக்கிராவ பிரதேச சபை உப தலைவர் அநுர பண்டார ​ஹேரத் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமய வழிபாடு ஒன்றிற்காக மாணவர்களை, அதிபர் கெக்கிராவ நகருக்கு அனுப்பியுள்ளார். அதன்போது மழை பெய்ததால் உப தலைவரின் பிள்ளை உள்ளிட்ட மாணவர்கள் நனைந்துள்ளனர்.

இது குறித்து ஆராய உப தலைவர் அதிபர் அலுவலகத்திற்கு சென்று அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாக்குதல் வரை சென்றுள்ளது.

அதிபர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கெக்கிராவ பிரதேச சபை உப தலைவர் இன்று காலை கைது செய்யப்ப்டுள்ளார்.