சிம்பாவே, இந்திய தொடர்-டோணிக்கு ஓய்வு..கோஹ்லி தலைவர்!

548

zimbabwe

சிம்பாவேக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோணிக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கேப்டனான கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

சிம்பாவேக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டோணி, முரளி விஜய், அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஷ்குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அணித் தலைவராக கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். கோஹ்லி தலைமையிலான் இந்த அணியில் ரோகித் ஷர்மா, ஷிகார் தவான், சுரேஷ் ரெய்னா, புஜாரா, தினேஷ் கார்த்திக், ராயுடு, ரகானே, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல், முகமது ஷமி அகமது, வினய் குமார், ஜெயதேவ் உனாட்கட், மோஹித் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அனுபவ வீரர்கள் இல்லாமல் இளம் இந்திய அணி சிம்பாவேயை எதிர்கொள்ளப் போகின்றது!