4 வயது சிறுவனின் உடலில் வசிக்கும் பேய்!!

286

Devil

தனது நான்கு வயது மகனின் உடலில் 30 வருடங்களுக்கு முன் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க கடற்படையை சேர்ந்தவரின் ஆவி இருப்பதாக தாய் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

விர்ஜினியாவைச் சேர்ந்த மிச்செல் லூகாஸ் என்ற பெண்மணி தனது நான்கு வயது மகன் ஆண்ட்ரூ உடம்பில் 1983ம் ஆண்டு அக்டோபர் மாதம் போரில் இறந்த லூயிஸ் என்பவரது ஆவி புகுந்துள்ளதாக கருதுகிறார்.

இதுபற்றி மிச்செல் கூறுகையில், ஆண்ட்ரூ போரில் இறந்த லூயிஸ் பற்றியும், அவர் இறந்த முறையையும் நினைவுகூர்கிறான் என்றும் லூயிஸுடன் இறந்த மற்ற வீரர்களின் புகைப்படங்களையும் அவன் சரியாக அடையாளம் காண்கிறான் எனவும் தெரிவித்துள்ளார்.

1983ம் ஆண்டு அக்டோபரில் நடந்த இந்த போரில் இறந்த 241 அமெரிக்க கடற்படை வீரர்களில் லூயிஸும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆண்ட்ரூ அடிக்கடி தானாக அழுவதாகவும் ஏன் அழுகிறாய் என்று கேட்டால், என்னை ஏன் நெருப்பில் எரிந்து இறக்க அனுமதித்தாய் என்று கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மிச்செல் மேலும் கூறுகையில், என் மகன் உடலில் ஆவி புகுந்திருக்கிறது என்று நினைக்கிறேன் என்றும் அவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.