உலகின் அதிபயங்கர பெண் தீவிரவாதி, உக்ரைன் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகின் அதிபயங்கர பெண் தீவிரவாதியான ‘வயிட் விடோ’ என்ற சமந்தா லெவ்த்வெயிட் 2 வாரங்களுக்கு முன் உக்ரைன் சென்று அங்கு அரசுக்கு ஆதரவான படையில் சேர்ந்து, குறி பார்த்து சுடும் வீராங்கனையாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது நடந்த சண்டையில், இவரை குறி பார்த்து சுடுவதில் வல்லவரான ரஷிய வீரர் ஒருவர் சுட்டுக்கொன்று விட்டதாக இப்போது ஊடகத்தகவல்கள் கூறுகின்றன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சமந்தாவை சுட்டுக்கொன்ற ரஷிய வீரரின் தலைக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்படும் என உக்ரைன் சிறப்பு பணிகள் பிரிவு அறிவித்துள்ளது.