வவுனியா பிரதேச செயலகத்தின் மாற்றாற்றல் மற்றும் முதியோர் சிறுவர்களை நினைவுகூறும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகள் உட்பட மாற்றாற்றல் உடையோர் மற்றும் முதியோர் மற்றும் திறமையான சிறுவர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் அதிதிகளாக வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சரஸ்வதி மோகநாதன் வவுனியா நகரசபை செயலாளர் க.சத்தியசீலன் வட மாகாணசபை உறுப்பினர் ஜயதிலக உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






