வன்னியில் விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படவில்லை : வினோதரலிங்கம்!!

605

vino-MP

வன்னி மாவட்டத்தில் விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு குறித்த நாடாளுமன்ற விவாத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் விளையாட்டுத்துறை சார் விடயங்கள் பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது. போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளன.



விளையாட்டுத்துறையை மேம்படுத்தத் தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

வடக்கு விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களும் பதக்கங்களை வென்றெடுப்பார்கள்.

வன்னியில் விளையாட்டு பயிற்சி கல்லூரிகள் கிடையாது. சிறந்த விளையாட்டு வீர வீராங்கணைகளை உருவாக்க பயிற்சி கல்லூரி அவசியமானது என நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் தெரிவித்துள்ளார்.