வவுனியாவில் கஞ்சா வைத்திருந்தவர் கைது!!

595

A6

வவுனியாவில் கஞ்சா வைத்திருந்த ஒருவரை விசேட அதிரடிப் படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனர்.

வவுனியா, குருமன்காடு பகுதியில் விசேட வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப் படையினர் சந்தேகத்திற்கிடமான ஒருவரை சோதனை செய்தபோது அவரது பையில் இருந்து ஒரு கிலோ 80 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.