பிரித்தானியாவை சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவன் தினமும் 12 பேருந்துகளை மாறி பள்ளிக்கு செல்லும் அவலநிலைக்கு ஆளாகியுள்ளான்.
பிரித்தானியாவின் மேற்கு யோக்ஷைர் நகரை சேர்ந்த கெல்லி-டேவிட் டையலர் (Kelly-David Taylor) என்ற தம்பதியினர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஏனெனில், இவர்கள் வசிக்கும் வீடு, பள்ளியிலிருந்து வெகுதொலைவில் உள்ளதால், இவர்களின் குழந்தைகள் தினமும் 12 பேருந்துகளில் பயணம் செய்து பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது.
இதுகுறித்து பெற்றோரின் குழந்தைகள்,பள்ளி கவுன்சிலிடம், எங்கள் குழந்தைகள் மிகவும் சிரமப்படுவதால், எங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள பள்ளியில் இடம் தருமாறு கேட்டுள்ளனர்.
ஆனால், வீட்டிற்கு அருகாமையில் உள்ள பள்ளியில் இடம் இல்லாததால் கவுன்சில் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது.