வன்னியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான இராஜ குகனேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இன்று இணைந்து கொண்டுள்ளார்.
1984 ஆம் ஆண்டில் இருந்து 1994 ஆம் ஆண்டுவரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தின் ஊடாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி வன்னி பாராளுமன்ற உறுப்பினராகவும், 2000 ஆம் ஆண்டில் இருந்து 2004 ஆம் ஆண்டுவரை மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தின் ஊடாக தமிழீழ விடுதலை இயக்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி வன்னி பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவானவர் இராஜ குகனேஸ்வரன்.
இவர் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி பிராந்திய தலைவராக அண்மைக்காலமாக செயற்பட்டு வந்திருந்தார்.