பிரான்ஸில் கடுமையான வெள்ளம் : 5 பேர் பலி!!

323

பிரான்ஸின் தென் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை மற்றும் பலத்த புயலால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தெற்கு பிரான்ஸில் கடந்த சில தினங்களாக வீசும் கடும் புயலால் பலத்த மழைபெய்து வருகிறது. இந்த தொடர்மழையினாலும் பலத்த புயல் காற்றினாலும் தெற்கு பிரான்சில் வசித்துவரும் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி தவிக்கின்றனர்.

இந்த இயற்கை பேரிடரால் இதுவரை தெற்கு பிரான்சில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், அங்கு வசிக்கும் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் இடங்களை காலி செய்துவிட்டு வெளியேற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

f f1 f3