மைதானத்துக்குள் ஹோர்ன்கள் கொண்டுவரத் தடை!!

555

horn

இலங்கை கிரிக்கெட் சபை, உடன் அமுலுக்கு வரும் வகையில் பார்வையாளர்கள் ஹோர்ன்களை (horn) மைதானத்துக்குள் கொண்டு வர தடை செய்துள்ளது.

இவற்றால் ஏனையோருக்கு ஏற்பாடும் அசௌகரியங்களை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவை மைதானத்துக்குள் காணப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் எனவும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இன்றையதினம் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.