
இந்தியாவின் பீகார் மாநிலம், புத்தகயாவில் உள்ள மகாபோதி விகாரைக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
மகாபோதி விகாரைக்கு அருகில் இன்று காலை 6 வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளன.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
குண்டு வெடிப்பில் கோயிலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை..
பௌத்த மதத்தினரின் முக்கிய விகாரையாக மகாபோதி கோவில் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.





