பெற்ற பிள்ளையை சாப்பிட்ட கொடூரத் தாய்!!

303

சீனாவில் தான் பெற்ற பிள்ளையை இளம் தாய் ஒருவர் கடித்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் சென்ஸென்(Shenzhen) மாகாணத்தில் வசித்த லி ஸெங்கூவா(24) என்ற பெண் தனது கர்ப்ப காலத்தில் வீதியில் உலாவிய படி இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, பிரசவ வேதனையால் துடித்ததால் அக்கம் பக்கத்தினர் இவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதன்பின் ஆண் குழந்தையை ஈன்ற இவர், அக்குழந்தையை சாப்பிட விரும்பியுள்ளார்.

எனவே குழந்தையின் கையில் தன் பற்களை வைத்து பலமாக கடித்துள்ளார். அப்போது இதனை பார்த்த செவிலியப் பெண் குழந்தையை காப்பாற்றியதுடன் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் லி சென்கூவாவை கைது செய்து விசாரித்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசார், மனநலம் பாதிக்கப்பட்ட இப்பெண்ணின் செயல்களை விரும்பாத இவரது மாமியார் இப்பெண்ணை வீதியில் அடித்து விரட்டியுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

1 2