கார்திகைத் தீபத் திருநாளான இன்று மாலையில் வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் சொக்கப்பானை எரிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கார்த்திகைத் தீபத் திருநாளான இன்று பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபட்டதோடு ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து “சொக்கப்பானை”க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து கொண்டாடபட்டது.
-கஜேந்திரன்-