யாழ். பல்கலை விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

442

uni

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று செவ்வாய்கிழமை அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீட்டினை நிறுத்த வேண்டும். உயர்கல்விக்கு 6 வீதம் ஒதுக்க வேண்டும். சம்பள உயர்வு அதிகரிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலைநிறுத்தத்துடன், ஒரு மணித்தியாலய ஆர்ப்பாட்டத்தினையும் மேற்கொண்டனர்.

காலை 11.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரைக்கும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் அடையாள வேலைநிறுத்த போராட்டமானது நாடளாவிய ரீதியில் நடைபெற்று வந்த நிலையில், கொழும்பில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்பாகவும் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அனைவரும் ஆதரவு வழங்கினார்கள்.