இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வான முதல் காஷ்மீர் வீரர்..

522

rasool

இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர்ப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலாக இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

இஸ்லாமியரான 24 வயது பர்வேஸ் ரஸூல் சிம்பாவேவுக்கு சுற்றுப் பயணம் செல்லும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் கிரிக்கெட் அரங்கம் ஒன்றுக்கு வெளியே தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தபோது, பொலிசார் ரஸூலை விசாரித்திருந்தனர். ஆனால் அவர் மீது குற்றச்சாட்டு எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

தான் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரனே ஒழிய பயங்கரவாதி அல்ல என்பதை உலகுக்கு நிரூபிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக பர்வேஸ் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர இளைஞர்களும் இந்தியாவுக்காக விளையாட முடியும் என்று பரைசாற்றுவதாக ரஸூலின் தேர்வு அமைந்துள்ளது என அவருடைய ரசிகர்கள் கூறுகின்றனர்.