வவுனியா மாவட்ட சிறுவர் கழக உறுப்பினர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் பயிற்சி நெறியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் கழக்ஙகளின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமை அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு முழு நாள் பயிற்சி நெறியில் கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து சிறுவர் கழக தலைவர்களிடம் கழகங்களின் சமூகம் சார் செயற்பாடுகளுக்கான திட்டங்கள் தொடர்பிலும் முன்மொழிவுகள் கேட்கப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.