சவுதியில் பணிப்பெண் ஒருவருக்கு வாளால் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. எதியோப்பியாவை சேர்ந்த கடிஜா பின்ட் மொஹமட் இஸா என்ற பெண்ணை தம்பதியினர் ஒருவர் தங்களது குழந்தையை பார்த்துக் கொள்ள பணிப்பெண்ணாய் அமர்த்தியிருந்தனர்.
இந்நிலையில் இவர் தான் பார்த்துக் கொள்ளும் அல்ஜாஸி பின்ட் மொஹமட் பின் பஹ்ட் அல்–ஹர்பி (3) என்ற குழந்தை தூங்கி கொண்டிருக்கும் வேளையில், அதை 30 முறை கத்தியால் குத்தியுள்ளார்.
இந்தப் படுகொலை செய்ததையடுத்து தப்பி சென்ற கடிஜா, பொலிசாரின் தீவிர தேடுதலில் பிடிப்பட்டுள்ளார். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய கடிஜாவுக்கு, வாளால் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இறுதியில் சவுதி அரேபியாவின் வடகிழக்கு நகரான, ஹபார் அல்– பாதினில் இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவருடன் சேர்த்து இந்த வருடம் சவூதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.