மறுமணம் செய்த தாயை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்!!

305

murder

பாகிஸ்தானில் 2வது திருமணம் செய்த தாயை கோடாரியால் வெட்டி கொன்ற மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள ஸ்வாத் மாவட்டத்தில் குலாம் பாத்திமா என்ற பெண் வசித்து வந்துள்ளார். தன் கணவரை இழந்து, விதவையாக வாழ்ந்த வந்த இப்பெண் கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தாரின் பலத்த எதிர்ப்புக்கிடையே ஃபசல் ரசாக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதன்பின் அதே மாவட்டத்தில் உள்ள மல்கானா மோர் பகுதியில் கணவர் மற்றும் அவர் மூலம் பெற்றெடுத்த 9 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவரது முதலாவது கணவனின் மகன் ஒருவர், சில நாட்களுக்கு முன்பு தாய் பாசத்தில் பாத்திமாவை காண வந்தாக கூறி, அவரது வீட்டில் தங்கியுள்ளான்.

இதற்கிடையே கடந்த 8ம் திகதி உணவில் மருந்து கலந்து பாத்திமா, அவரது கணவர் மற்றும் குழந்தைகள் உட்பட 6 பேரை ஒரு கும்பலின் உதவியுடன் கோடாரியால் வெட்டி கொன்றுள்ளான்.

இச்சம்பவத்தில் பாத்திமா மற்றும் அவரது கணவர் மற்றும் 4 குழந்தைகள் பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 5 குழந்தைகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது தலைமறைவாகியுள்ள குற்றவாளியையும், அவனது கூட்டாளிகளையும் பிடிக்க ஸ்வாத் மாவட்ட பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.