தமிழர்களை ஏமாளியாக பார்க்கும் குஷ்பு : பிரபல இயக்குனர்!!

437

Kushuboo

நடிகை குஷ்பு, தமிழர்களை ஏமாளியாக பார்க்கிறார் என்று இயக்குனர் தங்கர் பச்சான் கூறியுள்ளார். திமுகவில் இருந்து பிரிந்து காங்கிரஸில் இணைந்துள்ள குஷ்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தங்கர் பச்சான், தமிழ்நாட்டிற்கு பிழைக்க வந்த அவர், இந்த மக்கள் மூலமாக அதிக பணம் சம்பாதித்துள்ளார்.

அந்த பணத்தை வைத்து அவர் மக்களுக்கு என்ன செய்தார் அல்லது திமுகவில் இருந்து கொண்டு மக்களுக்கு என்ன சேவை செய்தார். தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள அவர், இனி மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்.

அதுமட்டுமல்லாமல் அவர் தமிழர்களை ஏமாளியாகவும், சுரணையற்றவர்களாகவும் தான் பார்க்கிறார், இதுதான் அவர் தமிழர்களுக்கு கொடுக்கும் மரியாதை எனக் கூறியுள்ளார்.