அதிக பனிமூட்டமே இந்த விமான விபத்துக்கு காரணம் என கடுவலை நீதவான் தம்மிக்க ஹேமபால குறிப்பிட்டுள்ளார்.
விபத்து இடம்பெற முன்னரே பனி மூட்டம் நிலவுவதாகவும், சீராக விமானத்தைச் செலுத்த முடியாதிருப்பதாகவும் இரத்மலானை விமானப் படைத் தளத்தின் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு விமானிகள் தகவல் வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னரே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விமானம் விபத்துக்கு உள்ளாக முன்னர் குறித்த பிரதேசத்திலுள்ள மரமொன்றின் மீது மோதுண்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் விமானியான குருநாகல் – கொக்கரல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சமந்த அபேவர்தன உயிரிழந்திருப்பதாகவும், ஸ்ரீலங்கா விமானப் படையைச் சேர்ந்த தரங்க மற்றும் பீ.ஜீ. சாந்த ஆகியோரும் உயிரிழந்திருப்பதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.