பிரித்தானியாவை உலுக்கிய கோரப் புயலால் 17,000 பேர் பரிதவிப்பு!!

260

பிரித்தானியாவில் திடீரென வீசிய சூறாவளி புயலால், 17 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பிரித்தானியாவில் நேற்று காலை திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டதால், 130 கி.மீ. வேகத்தில் சூறாவளி புயல் வீசியுள்ளது. மேலும் இடியுடன் கூடிய மழையும் பொழிந்ததால் இஸ்சல்ஸ் (Esels) மற்றும் வடக்கே ஷெட்லாந்து (Shetland) தீவுப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த புயலினால் ஏராளமான மின்கம்பங்களும், மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. சாலைகளில் கார்களும், வாகனங்களும் காற்றின் வேகத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளன.

வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது இப்பகுதியில் மின்சாரத்தை சரிபடுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக அந்நாட்டின் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

13 14