மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புக்காக சென்ற 81 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். குறித்த 81 பேரும் அவர்கள் தொழில் புரியும் இடங்களில் துன்புறுத்தல்களுக்கு இலக்காகியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்திற்கு அறிவித்ததையடுத்தே வேலைவாய்ப்பு திணைக்களம் அவர்களை இலங்கைக்கு வரவழைத்துள்ளது.
இதன்போது கட்டார் நாட்டிலிருந்து 31 ஆண்களும் சவுதி அரேபியாவிலிருந்து 21 பெண்களும் குவைத் நாட்டிலிருந்து 29 பேரும் இன்று 3 விமானங்களில் இலங்கைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு வேலைவாயப்பு திணைக்களம் இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.