வவுனியா நகரசபையின் பாதீடு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக நகரசபையின் செயலாளர் க.சத்தியசீலன் தெரிவித்தார். இது தெர்டாபில் அவர் தெரிவிக்கையில்,
வவுனியா நகரசபையின் 2015 ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் 16 ஆம் திகதியில் இருந்து 20 ஆம் திகதிவரை மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். எமது அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் இப் பாதீட்டை மக்கள் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்க முடியும் என்பதுடன் தமது ஆட்சேபனைகளையும் தெரிவிக்க முடியும் எனவும் தெரிவித்தார் –