வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் புதிய வேலர் சின்னக்குளத்தில் உள்ள மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் நேற்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
வட மாகாணசபையினால் அதன் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து மீளக்குடியேறியுள்ள இம் மக்களுக்கு தலா 25000 ரூபா பெறுமதியான கோழிக்குஞ்சுகள் மற்றும் அதற்கான தீவனம் போன்றவையே வழங்கப்பட்டிருந்தது.
மிகவும் வறுமைப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இவ்வுதவித்திட்டத்திற்கு அமைய புதிய வேலர் சின்னக்குளத்தில் 11 பேர் பயன்பெற்றுள்ளனர்.