மத நிந்தனை செய்த 4 பேர் தலையை கொய்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்!!

255

isis

மத நிந்தனை செய்ததாக கூறி சிரியாவில் 4 பேர் தலையைத் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் துண்டித்துக் கொன்றுள்ளனர்.

மேற்கு சிரியாவில் நடந்த இதனை சிரியாவில் மனித உரிமைகளைக் கண்காணித்து வரும் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. ஹாம்ஸ் என்ற நகருக்கே அருகே இந்த தண்டனையை பொதுமக்கள் மத்தியில் 4 ஆண்களுக்கு நிறைவேற்றியுள்ளனர்.

சிரியா மற்றும் ஈராக்கில் தங்களது பிடியில் உள்ள பகுதிகளில் இதுவரை நூற்றுக்கணக்கானோரை இதுபோல மத நிந்தனை செய்தது, மதக் கட்டுப்பாட்டை மீறியது, கள்ளக்காதல், ஓரினச் சேர்க்கை என்று பல்வேறு புகார்களின் பேரில் தலை துண்டித்தும், கற்களை வீசியும் கொன்றுள்ளனர்.

மேலும் சமீபத்தில் சிரியாவின் மன்பிஜ் நகரில், முறை தவறி உறவில் ஈடுபட்டதாக கூறி ஒரு ஆணையும், பெண்ணையும் கல்லால் அடித்துக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.