என்னுள் இசையாகிறாய்..

509

திஸ்ட்ட நடையில்
துள்ளித்திரிந்தேன்
உனைப்பார்த்ததும்
சதுஸ்ட்ட நடையாகி
கல்யானி இசைக்கிறேன்..

ராகமாலிஹாவாய்
குளைகின்றாய்
நீலாம்பரியாய் தோளிடுகின்றேன்
வளைந்து மடியில்
வீணையாகின்றாய்
என் விரல் மூக்கின் நுணிபட
மூச்சு மோகனம் பாடுகிறது..

நான் தட்டிடுவேனெ
தவிலாகின்றாய்
தொட்டிட மனம்
நாயனமாகின்றது
விரல் முட்டிட முட்டிகள்
தபேலாவாகின்றது
இசை கொட்டிட மெட்டிட
உன் கண்களில் வரி தேடுகிறேன்..

எதுகையும் மோனையுமாய்
கண்கள் தொடங்கி
கண்டைக்கால் வரை
கவிதை பெருகுகின்றது..

உலகிலேயே நீளக்கானமென
கின்னஸ் குழு
எனைத் தேடுகின்றது.

-திசா.ஞானசந்திரன்-