வவுனியா பஸ் நிலையப் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சியில் இருந்து கொழும்பு, கொலன்னாவ நோக்கி செல்வதற்காக வவுனியா பஸ் நிலையத்தில் நின்ற இருவர் மீது சந்தேகம் அடைந்த பொலிஸார் அவர்களது பயணப் பொதியை சோதனையிட்டனர்.
இதன்போது 2 கிலோ 125 கிராம் கேரள கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிககப்பட்டது. இதனையடுத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.