சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்கத்தை இந்தியாவிற்கு எடுத்துச் சென்ற இலங்கை மூதாட்டி ஒருவர் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
71 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மூதாட்டியிடம் இருந்து ஒன்றரை கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரியில் மறைத்து வைத்து இந்த தங்கம் கொண்டு செல்லப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.