ரயில் என்ஜினிலிருந்து பெட்டி கழன்று சென்றதால் விபத்து!!

497

train

பொல்காஹவெலயில் இருந்து மொரட்டுவ நோக்கி பயணித்த ரயிலில் என்ஜினுடன் பெட்டியொன்று தனியாக கழன்று சென்ற சம்பவம் இன்று காலை 7.45 அளவில் இடம்பெற்றுள்ளது.

களனி பாலத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தெரியவரவில்லை.

இதனால் தற்போது ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள், அலுவலகம் செல்வோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.