மக்களின் வரிப் பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவின் உறைவிடமாய் வன்னியின் மத்தியில் எமது சமூகத்தின் ஒளி விளக்காய் அமைந்து காணப்படும் வவுனியா பொது நூலகம் கேட்பாரற்று இருப்பதையிட்டு மக்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
வவுனியா பொது நூலகம் மும் மொழிகளில் எழுதப்பட்ட நூலகத்தின் பெயர்ப்பலகை முற்றாக அழிந்து போயுள்ளதுடன், நூலகத்தின் அழகின் முக்கிய வர்ணங்கள் அழிந்தும் காணப்படுகின்றமை, வாசகர்களையும் கல்விமான்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சரஸ்வதி சிலையின் குடையின் வர்ணப் பூச்சும் அழிவடைந்துள்ளது,
வன்னியின் வரலாறுகள் இவ்வாறு தான் பேணப்படுகின்றதா என கேள்வி எழுகின்றது, இது எமது மேலதிகாரிகளின் மந்த போக்குத் தன்மையையும், நிர்வாக திறனற்ற நிர்வாக அதிகாரிகளின் கண் காணாத போக்கினால் எமது அறிவின் உறைவிடம் அழிந்து வருகின்றது.
பொதுப் பூங்காவின் பல இடங்களில் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் இருப்பதனால் பூங்காவின் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், அத்துடன் உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கையெடுக்குமாறு மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.