வவுனியா செட்டிகுளம் பிரேதச செயலக பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்த வடக்கு மாகாண சுகாதார சமூகசேவைகள் புனர்வாழ்வு மற்றும் சிறுவர் நன்னடத்தை அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அத்துடன் இவர்களுக்கான உடனடி மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு அதிகாரிகளை பணித்ததோடு பெண்கள் சிறுவர்களுக்கான அவசர சுகாதார பொதிகளையும் வழங்கி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார். இதற்காக அவசர நிதியாக ரூபா 3 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது