சேலை நுாலும் என் சாலை ஆகின்றது..

564

வாழை இலை நீர்
விரும்பும் கிளிகள்..

அதைவிட்டு
உன் வாய் வழி நீர்
விரும்புகின்றது..

காலை எழு கதிரவன்
கதிர்களும் உன்
தோள் தொட்டு
குளிர்கின்றது..

சோலை மலரும்
மலர்களும் உன்
வாசம் நுகர்கின்றது..

மாலை வருகின்ற
மேகம் உன்
செவ்விதழ்
குழைகின்றது..

சேலை இணைகின்ற
நுாலும்
என் சாலை ஆகின்றது..

ஆலை இடுகின்ற
கரும்பும் உன்னில்
ஆசைப்படுகின்றது..

வேலை ஏதுமின்றி
எனக்கும் உன்னைக்
காதலிப்பதே
வேலையாகிறது..

பாலையாய் உன்
ஈரமில்லா
இதயம் அறிந்த பின்பு..

-திசா.ஞானசந்திரன்-