கணவனை எலி மருந்து வைத்து கொன்றேன் : சிறுமியின் பரபரப்பு வாக்குமூலம்!!

256

sirumi

நைஜீரிவால் கணவரை எலி மருந்து வைத்த கொன்றதாக சிறுமி அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள கானோ மாநிலத்தைச் சேர்ந்தவர் உமர் சானி (35).ரமது என்ற பெண்ணை மணந்த அவரது இரண்டாவதாக அதே பகுதியைச் சேர்ந்த வாசிலா தசுயி (14) என்ற சிறுமியை திருமணம் செய்துள்ளார்.

உமர் சானியை கடந்த ஏப்ரல் மாதம் 5ம் திகதி வாசிலா விஷம் வைத்து கொன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட வாசிலா வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

அப்போது கணவர் உமருக்கு உணவில் எலி பாசானம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக வாசிலா ஒப்புக் கொண்டுள்ளார்.
எனவே வாசிலாவுக்கு மரண தண்டனை அளிக்குமாறு மாநில வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வழக்கு விசாரணை பிப்ரவரி மாதம் 16ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வாசிலாவை உமர் திருமணம் செய்து கற்பழித்ததாக புகார் ஒன்று எழுந்துள்ளது.