இன்று கிறிஸ்துமஸ் உலகெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் வண.பிதா சத்யராஜ் தலைமையில் சிறப்பு ஆராதனைகளும் வழிபாடுகளும் இடம்பெற்றன.
கடும் மழை பெய்தபோதும் பெருந்திரளான மக்கள் ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்டதை காணக் கூடியதாக இருந்தது.
இன் நிகழ்வுகள் அனைத்தையும் மகாராஜா குழுமத்தின் சக்தி வானொலி நிறுவனம் நேரடியாக சக்தி FM வானொலியில் ஒலிபரப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
-கஜேந்திரன்-