இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை இரவு கொழும்பு வருகின்றார்.
இவர் இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய சில அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இதேவேளை, இலங்கை, இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையினை கொழும்பில் நடத்த பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
இலங்கை வரும் சிவ்சங்கர் மேனன் இந்த பாதுகாப்பு பயிற்சிப் பட்டறையிலும் கலந்துகொள்ளவிருப்பதாக வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சுகள் உறுதியளித்துள்ளன.
இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ளும் முகமாக மாலைத்தீவு நாட்டின் பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த பல அதிகாரிகள் இலங்கை வரவிருப்பதாகவும் மேற்படி அமைச்சுக்கள் தெரிவித்தன.